திருச்சி: பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக ரங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வந்தது. இதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வருவாய் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த 2 சூட்கேசில் 10 கிலோ மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அந்த பயணியிடம் விசாரணை நடத்தியதில், பாங்காக்கில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும், இதன் மதிப்பு ரூ.10 கோடி என்றும் தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், யாருக்காக கடத்தி வரப்பட்டது, இதில் வேறு யாருக்ேகனும் தொடர்பு இருக்கிறதா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
The post திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: பயணியிடம் விசாரணை appeared first on Dinakaran.