மதுரை கீரைத்துறை பகுதியில் கடந்த 7.3.2024ல் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டியராஜன் (23), பிரசாந்த் (22), மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா (20) ஆகியோரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
அப்போது இருவரும், ‘‘நாங்கள் வெள்ளை காளியின் கூட்டாளிங்க… கிளாமர் காளி கொலையில் எதற்கு சுபாஷ் சந்திரபோசை என்கவுன்டர் செய்தீர்கள்? நாங்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், நீதிபதியை கொல்லாமல் விடமாட்டோம்’’ என கூச்சலிட்டனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தவாறு பலத்த பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக இருவர் மீதும் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் நீதிமன்றத்திற்குள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கஞ்சா வழக்கில் 12 ஆண்டு சிறை நீதிபதிக்கு கைதிகள் கொலை மிரட்டல்: மதுரை நீதிமன்றத்தில் கண்ணாடியை உடைத்து ரகளை appeared first on Dinakaran.