சேலம், ஏப்.24: சேலம் அஸ்தம்பட்டி பாரதிநகர் சேர்ந்தவர் சித்தேஸ்வரன் (38). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சித்தேஸ்வரன் தனது நண்பர்களான முஸ்தபா, அப்பு (எ) அரவிந்த் ஆகியோருடன் அந்த பகுதியில் மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முஸ்தபாவை சித்தேஸ்வரன் மற்றும் அப்பு ஆகியோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முஸ்தபா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ரவுடி சித்தேஸ்வரனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அப்புவை தேடி வருகின்றனர்.
The post நண்பரை தாக்கிய ரவுடி கைது appeared first on Dinakaran.