சென்னை, ஏப்.17: வீடு கட்ட ரூ.5 லட்சம் கடன் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்த எலக்ட்ரீசியன் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தப்பி ஓடிய உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுராந்தகம் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் அடுத்த மங்கலம் கிராமத்ைதச் சேர்ந்தவர் சரத்பாபு (45), எலக்ட்ரீசியன். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ் (30), ஆம்புலன்ஸ் டிரைவர். இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்நிலையில், சரத்பாபு 2021ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தனது உறவினரான சிவராஜிடம் ரூ.5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். பின்னர் வாங்கிய பணத்தை சரத்பாபுவிடம் சிவராஜ் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால், சரத்பாபு பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சிவராஜ் தனது காரில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் சரத்பாபு தனது நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை சிவராஜ் பார்த்து, பணம் வாங்கிவிட்டு காலம் தாழ்த்தியும்கூட இன்னும் கொடுக்காததால் அவர் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். தனது கடனை தராமல் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த ஆதங்கத்தில், காரை படுவேகமாக ஓட்டிச் சென்று சரத்பாபு மீது பயங்கரமாக மோதிவிட்டு அங்கிருந்து சிவராஜ் சென்றுவிட்டார்.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சரத்பாபு ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை அங்கிருந்த நண்பர்கள் உடனே மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரத்பாபு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த படாளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சரத்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காரை ஏற்றி சரத்பாபுவை கொலை செய்த சிவராஜ் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post ரூ.5 லட்சம் கடனை தராததால் கார் ஏற்றி எலக்ட்ரீசியன் படுகொலை: உறவினர் தப்பி ஓட்டம் மதுராந்தகம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.