வேளச்சேரி, ஏப்.28: வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஆனந்தன் (50). தனியார் பிரின்டிங் பிரஸ்சில் வேலை செய்து வந்த இவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில், அவர் சில ஆண்டுக்கு முன் சொந்தமாக பிரின்டிங் பிரஸ் நடத்தியுள்ளார். அப்போது தொழில் நலிவடைந்து, கடன் அதிகரித்துள்ளது. பின்னர், அதை விற்றுவிட்டார். பின்னர் இன்னொருவர் பிரின்டிங் பிரஸ்சில் சம்பளத்திற்கு வேலை செய்து வந்தார். இருந்தும் கடன் பிரச்னை தீரவில்லை. இதில் மனமுடைந்த ஆனந்தன், நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில விசாரிக்கின்றனர்.
The post கடன் பிரச்னையால் பிரின்டிங் பிரஸ் ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.