விருதுநகர், மார்ச் 23: முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் புதிய திட்டத்தில் பயன்பெற விரும்பும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக விருதுநகர் கலெக்டர் வெளியிட்டுள்ள தகவலில், இந்திய ராணுவப்பணியில் இளம் வயதை கழித்து பணிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்ய, வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியில் இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள் தகுதியானவர்கள்.முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு கிடையாது. படைப்பணியின் போது காலமான படைவீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்த பட்சம் 21 வயது ஆக இருக்க வேண்டும்.
தமிழகத்தை சேர்ந்தவராக இருத்தல் அவசியம். விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி இல்லை. வருமான வரம்பும் இல்லை. முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் புதிய திட்டத்தில் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் தேவையான விவரங்களை பெற திருவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி எண் 04563-296382 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
The post முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.