உடுமலை, மார்ச் 25: உடுமலையில் வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டைத்திடல் உள்ளது. மாரியம்மன் கோயில் தேர்திருவிழாவையொட்டி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழா கடைகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக ஏலம் மூலம் குத்தகைதாரரிடம் குட்டைத்திடல் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏலம் கடந்த வாரம் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கவுரிசங்கர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஒருவர் மட்டுமே பங்கேற்றார். மேலும் குறைந்தபட்ச ஏல தொகையாக ரூ.1 கோடிக்கு மேல் நிர்ணயித்துள்ளதை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏலம் நடந்தது. இதில் 2 பேர் பங்கேற்றனர். அவர்களும் குத்தகை தொகையை குறைக்க வலியுறுத்தியதால் ஏலம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
The post உடுமலை குட்டைத்திடல் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.