திருச்சுழி அருகே சாலை விரிவாக்க பணி தீவிரம்

திருச்சுழி, மார்ச் 25: திருச்சுழி அருகே தார்ச்சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அருப்புக்கோட்டையில் இருந்து கீழ்குடி வழியாக கமுதிக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் இந்த சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இருப்பினும் சாலை குறுகலாக உள்ளதால் எதிரே வருகின்ற வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டன.

எனவே சாலையை ஒருவழித்தடத்தில் இருந்து இடைவழித்தடமாக மாற்றி அகலப்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பாக்கியலெட்சுமி முன்னேற்பாடு நடவடிக்கை காரணமாக தற்போது ரூ.3.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

முதற்கட்டமாக மேலையூர் முதல் செங்குளம் வரை பணிகள் நடந்து வருகின்றன. பணிகளை கோட்டப் பொறியாளர் பாக்கிய லெட்சுமி ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி கோட்டப் பொறியாளர் முத்துசாமி, உதவிப் பொறியாளர் தினேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர். தார்ச்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால் வாகனங்கள் எளிதாக கடக்க முடிகிறது என பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post திருச்சுழி அருகே சாலை விரிவாக்க பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: