மதுரை, மார்ச் 23: குற்ற வழக்குகளை மறைத்த வழக்கறிஞரின் பதிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பார் கவுன்சில் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆஷிக், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் முகமது ஜிப்ரி என்பவர் மீது 2 குற்ற வழக்குகள் உள்ளன.
இதை மறைத்து பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். வழக்கறிஞர் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளார். இவர், திருவாடானை நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது ஆள் மாறாட்டம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.
எனவே, முகமது ஜிப்ரியின் பார் கவுன்சில் பதிவை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், பதிவை ரத்து செய்வது குறித்து இந்திய பார் கவுன்சில் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய பார் கவுன்சில் தலைவர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்ட விதிகளை மீறி குற்ற வழக்குகளை மறைத்து வழக்கறிஞராக பதிவு செய்த இவரின் பதிவை ரத்து செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
The post குற்ற வழக்குகளை மறைத்த வழக்கறிஞர் பதிவை ரத்து செய்ய வழக்கு: பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.