பட்டிவீரன்பட்டி, மார்ச் 23: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு ஊராட்சிக்கு உட்டபட்ட நல்லாம்பிள்ளை, சாலைப்புதூரில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளில் இப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ-மாணவிகளின் நலன்கருதி இந்த பள்ளிகளில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. பூமிபூஜையில் ஆத்தூர் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் ராமன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பாஸ்கரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதிமணி மலைச்சாமி, சித்தரேவு ஊராட்சி செயலாளர் சிவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அரசு பள்ளிகளில் ரூ.35 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமிபூஜை appeared first on Dinakaran.