மாமண்டூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நிற்கும் போது பெண் பயணி அரசு பேருந்திலிருந்து இறங்கும் போது கால் தவறி நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். கீழே விழுந்த பெண்மணியை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார். மேலும், இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பேருந்தில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.