அபிஷேக்கின் பக்கத்து வீட்டுக்காரர் மாண்டி. இவருக்கும், விஞ்ஞானி அபிஷேக்கிற்கும் பைக் பார்க்கிங் தொடர்பாக மோதல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வந்த அபிஷேக் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது மாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்பு மோதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இருதரப்பிலும் வாக்குவாதம் நடந்த பிறகு, மாண்டி திடீரென அபிஷேக்கை தாக்கி கீழே தள்ளி விட்டார். இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார். இதையடுத்து மாண்டி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போலீசில் விசாரித்து வருகின்றனர்.
The post பார்க்கிங் பிரச்னையில் தாக்குதல் இளம் விஞ்ஞானி அடித்துக்கொலை: சிசிடிவி காட்சிகள் வைரல் appeared first on Dinakaran.