இந்நிலையில் கைதான மதுகுமார் ஜாமீனில் வந்ததும் அவர்களுக்கு இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அனிகுட்டன் மனைவியை கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆறுகாணி போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவு மதுகுமாரை கைது செய்தனர். இதையறிந்த பாஜ கட்சியினர் ஆறுகாணி காவல் நிலையத்தில் திரண்டனர். பின்னர் அவரை குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மதுகுமாரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
The post மனைவிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் டிரைவரை தற்கொலைக்கு தூண்டிய பா.ஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.