ஓட்டப்பிடாரத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

கோவில்பட்டி, மார்ச் 13: கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவில்பட்டி கோட்டத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இன்று (13ம் தேதி) காலை 11 மணிக்கு ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எனது தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஓட்டப்பிடாரத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: