தூத்துக்குடி, மார்ச் 13: தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலியானார். தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் தாமஸ் மகன் லூர்து செல்வின் (22). இவர், நேற்று முன்தினம் தூத்துக்குடியில் எட்டயபுரம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிந்தார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த லூர்து செல்வினை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.