பொன்னமராவதியில் சாரலில் தொடங்கி கன மழை பெய்தது

 

பொன்னமராவதி, மார்ச் 13: பொன்னமராவதியில் இரண்டாவது நாளாக வெப்பநிலை மாறி சாரலில் தொடங்கி கன மழையாக பெய்துள்ளது. பொன்னமராவதி பகுதியில் சமீப காலமாக கடும் வெயில் வாட்டிவந்தது. இதனால் மதிய வேளைகளில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை அடிக்கடி தூரல் சாரலுமாக காணப்பட்டது.

மாலை பொன்னமராவதி நகரில்கன மழையும் மற்ற பகுதியில் பரவலாக மழையும் பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியாக காணப்பட்டது.இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்று மதியம் பொன்னமராவதி, கண்டியாநத்தம், ஆலவயல், அம்மன்குறிச்சி,வேந்தன்பட்டி, கொப்பனாபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது குளிர்வித்தது.

The post பொன்னமராவதியில் சாரலில் தொடங்கி கன மழை பெய்தது appeared first on Dinakaran.

Related Stories: