அரசு பள்ளி மாணவர்களுக்கு நல்விருந்து

 

சிவகாசி, அக்.14: சிவகாசி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு நல்விருந்து வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் நன்கொடையாளர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில், சிவகாசி அருகே விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நல்விருந்து நடைபெற்றது. நல்விருந்தை சிவகாசி எம்எல்ஏ அசோகன் கலந்துகொண்டு தொடங்கி வைத்து மாணவ மாணவியுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

The post அரசு பள்ளி மாணவர்களுக்கு நல்விருந்து appeared first on Dinakaran.

Related Stories: