குன்னூர்-கோத்தகிரி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை

 

ஊட்டி, அக்.19: குன்னூர்-கோத்தகிரி செல்லும் சாலையில் விழுந்த மரம் அகற்றப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில், பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தும் மின்கம்பங்கள் சாய்ந்தும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை தீயணைப்புத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்த போதிலும் குன்னூர்-கோத்தகிரி செல்லும் சாலையில் பைனீஸ் மரத்தில் ஒரு பகுதி முறிந்து சாலையோரத்தில் விழுந்துள்ளது. இதன் கிளைகள் சாலையில் நீட்டிக் கொண்டிருக்கிறது. இதனை அகற்றாமல் விடப்பட்டுள்ளதால், இந்த வழியாக வரும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூர்-கோத்தகிரி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: