கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்டர் அமைக்க கோரிக்கை

 

மதுக்கரை, அக்.19:கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்டர் அமைத்து பிளாட்பாம் அதிகப்படுத்த வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் அருண்குமார் சதுர்வேதி, கூடுதல் கோட்ட மேலாளர் அனில் குமார் ஆகியோர் கிணத்துக்கடவு ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களை, கிணத்துக்கடவு ரயில் பயணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்பித்தன் தலைமையில், சங்க நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

அதில், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி முன்பதிவு கவுண்டர் திறக்க வேண்டும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்போது பிளாட்பாம்களை தாண்டி பெட்டிகள் நிற்பதால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால், பிளாட்பாம்களை அதிகப்படுத்த வேண்டும்.கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக ராமேஸ்வரம் திருச்செந்தூர் மற்றும் மயிலாடுதுறை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் ரயில்களை இயக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

The post கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்டர் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: