மேட்டுப்பாளையத்தில் அக்.31க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

 

மேட்டுப்பாளையம், அக்.19:மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா நேற்று முன்தினம் விடுத்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-2025ம் வருடம் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்.31ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சொத்து வரியை உடனடியாக செலுத்தி பயன்பெற வேண்டும். நகராட்சி கணினி சேவை மையத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் குத்தகை தொகை உள்ளிட்டவற்றை உடனே செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

The post மேட்டுப்பாளையத்தில் அக்.31க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Related Stories: