சிவகளையில் ஐப்பசி தானம் நிகழ்ச்சி

ஏரல், அக். 19: ஏரல் அருகேயுள்ள சிவகளையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி விசுவை முன்னிட்டு பெண்கள், இங்குள்ள குளத்தில் புனித நீராடி கன்னிகை பீடத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம். அப்போது பூ, மஞ்சள், குங்குமம், அரிசி, வெல்லம் மற்றும் வெற்றிலைகளை தானமாக வழங்கி நீரில் விடுவர். இந்த ஆண்டு சோரநாத விநாயகர் மகளிர் வழிபாட்டு குழுவினர் ஐப்பசி விசுவை முன்னிட்டு இப்பகுதியில் உள்ள குளங்களில் புனித நீராடி சிவகளை மேலச்செல்வனூர் கன்னிகை பீடத்தில் சீரான மழை வேண்டி, பொருநையை வணங்கி தீபங்களை தானமாக வழங்கி வழிபட்டனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

The post சிவகளையில் ஐப்பசி தானம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: