கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த

வேலூர், அக்.19: போளூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி மகனான கல்லூரி மணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா அம்மாபாளையம் அடுத்த மேல்முடையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், விவசாயி. இவரது மனைவி கற்பகம். இவர்களது மகன்கள் தமிழ்வாணன்(20), உதயகுமார்(19). தமிழ்வாணன் பெரும்புதூரில் பி.டெக். படித்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 11ம்தேதி மதியம் 1 மணியளவில் பைக்கில் அம்மாபாளையம் அருகே சென்றார். அப்போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

உடனடியாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தமிழ்வாணனுக்கு நேற்று மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர்.
தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தானமாக பெற்றது. இதில் இருதயம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல், இடது சிறுநீரகம் சிஎம்சி ராணிப்பேட்டை வளாகத்துக்கும், வலது சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. கண்கள் வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மேலும் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட தமிழ்வாணன் உடலுக்கு அரசு சார்பில் அதிகாரிகள் இன்று மரியாதை செலுத்த உள்ளனர். (ெசய்திஎண்06) பெண் வேடமிட்டு வீடியோ ரீல்ஸ் வெளியிட்டவர் சிக்கினார்.

The post கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த appeared first on Dinakaran.

Related Stories: