திருப்பூர், ஜூலை 3: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வருகிற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு முதன்மை கல்வி அதிகாரி புனித அந்தோணியம்மாள் தலைமை தாங்கினார்.
மாவட்டம் முழுவதும் இருந்து 14 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில் பங்கேற்றனர். இதுபோல், நேற்று முன்தினம் மாவட்டத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கான கலந்தாய்வில் 14 பேர் கலந்து கொண்டனர்.
