கத்தார் எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடி விபத்து: இந்தியர் உட்பட 13 பேர் பலி, 66 பேர் காயம்

 

தோகா: கத்தாரின் முக்கிய எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தியர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி மையமாக கத்தாரின் ராஸ் லப்பான் தொழிற்பேட்டை நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பார்சான் எரிவாயு விநியோக நிலையத்தில் உள்ளூர் தேவைகளுக்காக எரிவாயு சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கட்டுப்பாட்டை இறுக்கியதால் வாடிக்கையாளர்களுக்கு எரிவாய]வை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் உருவானத்தை அடுத்து கத்தார் தனது உற்பத்தியை நிறுத்தியிருந்தது.

போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கனன பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நீரிணைப் பகுதியில் ஈரான் தனது பிடியை தளர்த்தியதை தொடர்ந்து கத்தார் தனது ஏற்றுமதி முனையத்தை மீ்டும் இயக்கும் பணிகளை தொடங்கியது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கமான செயல்பாடுகள் தொடங்கப்பட்ட போது, எதிர்பாராத விதமாக சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த தீ விபத்தில் விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருப்புப் பிழம்பு மற்றும் கரும்புகை பல மைல் தொலைவு வரை தெரிந்ததுடன், மீட்புப் பணிகளுக்காக சர்வதேச தேடுதல் குழுவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். இதனை ஒரு தொழில்நுட்ப விபத்து என கத்தார் எனர்ஜி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் அதிகாரிகள் கூறுகையில், ‘தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் இந்த சம்பவம் குறித்து கவலைத் தெரிவித்துள்ளது. நிலைமை குறித்து கத்தார் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

Related Stories: