உக்ரைன் டிரோன் தாக்குதல் கிரிமியாவில் பெட்ரோல் விற்பனை நிறுத்தம்

மாஸ்கோ: உக்ரைன் நடத்திய தொடர்ச்சியான டிரோன் தாக்குதல்களால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவில் பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்யா நியமித்துள்ள கிரிமியா ஆளுநர் செர்ஜி அக்ஸியோனோவ் கூறுகையில்,நேற்றுமுன்தினம் உக்ரைன் நடத்திய ஆளில்லாத டிரோன் தாக்குதலில் 4 பேர் பலியாகினர். 28 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல்களால், அரசு சாராத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

அரசு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மட்டும் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்றார். கிரிமியாவில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதால் எரிபொருள் விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு பிராந்தியம் முழுவதும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. உக்ரைனிடம் இருந்த கிரிமியாவை 2014ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது.

Related Stories: