ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி; அதானி மீதான வழக்கை கைவிட்டது அமெரிக்கா

 

* 2வது வழக்கிலும் சாதகமான முடிவு
* ரூ.26 ஆயிரம் கோடி அபராதம்

நியூயார்க்: அமெரிக்காவின் பங்குச் சந்தை கண்காணிப்பு அமைப்பான எஸ்.இ.சி மற்றும் நீதித்துறை, அதானி குழுமம் இந்தியாவில் மிகப்பெரிய சூரிய மின்சார திட்டங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் வழங்கியதாகக் குற்றம்சாட்டியது. இது தொடர்பான வழக்கில், 2024ல் அதானிக்கு பிடிவாரன்ட் உத்தரவு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த வழக்கை கடந்த வாரம் ரத்து செய்வதாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. இதே போல் அதானி நிறுவனம் மீதான மேலும் ஒரு வழக்கை அமெரிக்கா நேற்று தள்ளுபடி செய்துள்ளது. ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மீறி அதானிக்கு சொந்தமான நிறுவனம் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜி இறக்குமதி செய்ததாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அதானி குழுமம், அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் நேற்று ஒரு சமரச உடன்படிக்கையை எட்டியது. விசாரணைக்கு விரிவான ஒத்துழைப்பை வழங்கியதால் அதானி குழுமம் மீதான வழக்கை கைவிட அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ரூ.26 ஆயிரம் கோடி அபராதம் செலுத்த முன்வந்துள்ளது. இந்தத் தீர்வு, குற்றத்தையோ அல்லது தவறையோ நிரூபிப்பதாக அமையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: