வளைகுடா நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் தற்காலிக நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு; மீண்டும் பேச்சுவார்த்தை?

 

வாஷிங்டன்: ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அதன் பிராந்திய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்த அமெரிக்க ராணுவம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதும், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஈரான் மீது நடத்தப்படவிருந்த மிகப்பெரிய அளவிலான புதிய தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். வளைகுடா நாடுகளின் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, சிறிது அவகாசம் வழங்க டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘‘ஈரான் இஸ்லாமிய குடியரசு மீதுான ராணுவத் தாக்குதலை தள்ளிப்போடுமாறு கத்தார் அமீர் ஷேக் தமீம் ஹமாத் அல் தானி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோர் என்னைக் கேட்டுக்கொண்டனர்.

நாளை (செவ்வாய் கிழமை) மிகத் தீவிரமான ஒரு தாக்குதலை நடத்துவதற்கு நாங்கள் தயாராகிக்கொண்டு இருந்தோம். அதை நான் சிறிது நாட்களுக்கு தள்ளி வைத்துள்ளேன். ஒரு வேளை நிரந்தரமாகக் கூட இருக்கலாம் அல்லது குறைந்தகட்சம் சிறிது காலத்திற்காவது இருக்கலாம். ஏனெனில் ஈரானிடம் நாங்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். அவற்றின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: