இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் தாக்குதலால் அதிர்ந்து போன ஈரான், அமெரிக்காவுக்கு படைத்தளங்கள் அமைக்க உதவியுள்ள சவுதி உள்ளிட்ட நாடுகளை தாக்கி வருகிறது. சவுதியை தாக்கினால் பாகிஸ்தானை தாக்கியது போன்றது என்று இருநாடுகளும் ஒரு பரஸ்பர தற்காப்பு ஒப்பந்தம் செய்துள்ளன. அந்த ஒப்பந்தம் அடிப்படையில் சவுதி பாதுகாப்பிற்காக 8,000 வீரர்களையும், ஜேஎப் 17 ரக போர் விமானப் படையையும், ஒரு வான் பாதுகாப்பு அமைப்பையும் பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.
