ஒரத்தநாடு பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சப்ளை கட்

ஒரத்தநாடு, மே 6: ஒரத்தநாடு பகுதியில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரத்தநாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மின்சார வாரியம் சார்பாக இப்பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உஞ்சிய விடுதி, சிவ விடுதி, ராஜாளி விடுதி, பாதீரங்கோட்டை, ஊரணிபுரம் நகரம், அக்கரை வட்டம், தளிகை விடுதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் சப்ளை வழங்கப்படும் என்று ஒரத்தநாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

 

 

Related Stories: