வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது செய்யாறு அருகே

 

ெசய்யாறு, மே 7: செய்யாறு அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு அடுத்த முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(32). இவர் அதே கிராமத்தில் உள்ள தனது மூத்த சகோதரி சித்ரா வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை முருகன் செய்யாற்றைவென்றான் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜனா(24), சுதர்சன் ஆகியோர் முருகனிடம் தகராறு செய்தனர். அதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஜனா, சுதர்சன் ஆகிய இருவரும் ேசர்ந்து முருகனை கைகளால் சரமாரியாக தாக்கினர். மேலும் ஜனா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனின் தலை மீது வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த முருகன் அலறி கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர். இதைப்பார்த்த இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த முருகனை, அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முருகன் அனக்காவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து ஜனா, சுதர்சன் இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: