செய்யாறு, மே 7: செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழன்னை சிலை திறப்பு விழா நடந்தது.
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட தமிழன்னை சிலையினை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி பள்ளிக்கு வழங்கினார். இதையடுத்து சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.செந்தில்முருகன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
நிகழ்வில் முன்னாள் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிகுமார் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் லட்சுமி மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் மாணவியர் சங்க தலைவி மெய். பூங்கோதை மற்றும் உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கேப்சன்
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழன்னை சிலை திறப்பு விழா நடந்தது.
