கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச தீர்வு மைய அலுவலகத்தில் மீட்டெடுக்கப்பட்ட 51 பேருக்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மீண்டும் இப்படி யாரேனும் பணம் கொடுத்து வேலை செய்ய சொன்னால் போக வேண்டாம் என்று அறிவுரை வழங்கி அவர்களை கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தின்கீழ் இயங்கும் திருமண மண்டபத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு உடை ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
