திருக்காட்டுப்பள்ளி, மே 6: திருக்காட்டுப்பள்ளியில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று திருவாரூரில் 43வது வணிகர்கள் விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டு நடைபெற்றது.
இதன் காரணமாக கூட்டமைப்பின் தலைவர் சுந்தர மூர்த்தி தலைமையில், அனைத்து வணிகர்களும் திருவாரூரில் நடைபெறும் மாநாட்டிற்கு சென்றதால், நேற்று காலை முதலே அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் நேற்று முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
