தஞ்சாவூர், மே 4: பாபநாசம் அருகே மேலவழுத்தூர் மகா மாரியம்மன் ஆலய 11ம் ஆண்டு பால்குடம் விழா நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் அமைந்துள்ள வேம்படி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 11ம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி, குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை வந்தடைந்தனர். தொடா்ந்து, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் பால் அபிஷேக, ஆராதனையும், கஞ்சி வாா்த்தலும் நடைபெற்றது. விழாவில் மேலவழுத்தூர் கிராமவாசிகள் மற்றும்,திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.
