விழுப்புரம் நகராட்சியில் தார் சாலை பணிகளை தரமுடன் மேற்கொள்ள வேண்டும்

*சேர்மன் தமிழ்செல்விபிரபு உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் தார் சாலை அமைக்கும் பணிகளை சேர்மன் தமிழ்ச்செல்விபிரபு பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.விழுப்புரம் நகராட்சியில் சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பாதாளசாக்கடை திட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைத்து சாலைகள் போடுவதற்கு நிதிஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி விழுப்புரம் நகராட்சி 37வது வார்டில் நடைபெறும் தார்சாலை பணிகளை சேர்மன்தமிழ்ச்செல்விபிரபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நகராட்சி பொறியியல் அதிகாரிகளிடம் பணிகளின் தரம்குறித்து கேட்டறிந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். நகரமன்ற உறுப்பினர் இளந்திரையன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: