நெடுஞ்சாலைத் துறை சார்பில் 13 சாலைகள், ஒரு பாலத்தை திறந்து வைத்து மயிலாடுதுறை புறவழிச் சாலைப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4712 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் திருச்சிராப்பள்ளி கரூர் மாவட்டங்களில் 101 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒரு பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மயிலாடுதுறை புறவழிச் சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை உட்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு அரசு தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை உருவாக்கிடும் வகையில், நெடுஞ்சாலை துறை வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், மேம்பாடு செய்தல், புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

கட்டி முடிக்கப்பட்ட 13 சாலைப் பணிகள் மற்றும் ஒரு பாலத்தை திறந்து வைத்தல்

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 897 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் 26 கி.மீ. நீளத்திற்கு (வாலாஜாபாத் புறவழிச்சாலை 6.846 கி.மீ உட்பட) நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட மற்றும் 13.79 கி.மீ நீளத்திற்கு 10 மீ அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட செங்கல்பட்டு -காஞ்சிபுரம் சாலை (SH58);

திருவள்ளூர் மாவட்டத்தில் 719 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் புன்னப்பாக்கம் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை (-2) 12.8 கி.மீ நீளத்திற்கு இருபுறமும் இருவழிச் சேவை சாலைகளுடன் கடினப் புருவத்துடன் அமைக்கப்பட்ட ஆறு வழித்தட சென்னை எல்லை சாலை;

காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் 674 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் 41.779 கி.மீ, நீளத்திற்கு (அரக்கோணம் புறவழிச்சாலை 16.915 கி.மீ உட்பட) 10 மீ அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் திருத்தணி சாலை;

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், 559 கோடியே 06 இலட்சம் ரூபாய் செலவில் 50.590 கி.மீ நீளத்திற்கு (ஸ்ரீவைகுண்டம் புறவழிச்சாலை 12.95 கி.மீ உட்பட) 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட திருச்செந்தூர் பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் சாலை;

தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 468 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் 36.779 கி.மீ நீளத்திற்கு (வைத்தீஸ்வரன் கோயில் புறவழிச்சாலை 4.150 கி.மீ உட்பட) 10 மீட்டர் அகல இருவழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட கும்பகோணம் – சீர்காழி சாலை;

கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 428 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவில் 31.51 கி.மீ நீளத்திற்கு 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட கடலூர் – மடப்பட்டு சாலை;

தென்காசி மாவட்டத்தில் 254 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் 22.9 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட திருநெல்வேலி செங்கோட்டை – கொல்லம் சாலை;

திருநெல்வேலி மாவட்டத்தில் 239 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் 21.40 கி.மீ நீளத்திற்கு 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட திருச்செந்தூர் பாளையங்கோட்டை அம்பாசமுத்திரம் சாலை மற்றும் 51 கோடி ரூபாய் செலவில் 6 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்ட திருநெல்வேலி புறவழிச்சாலை;

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 157 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் 14.041 கி.மீ நீளத்திற்கு, (சன்னாநல்லூர் புறவழிச்சாலை 2.00 கி.மீ உட்பட) 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மயிலாடுதுறை – திருவாரூர் சாலை;

சேலம் மாவட்டத்தில் 95 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட 10.075 கி.மீ நீளத்திற்கு அகலப்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட மல்லியக்கரை ஆத்தூர் சாலை;

நாமக்கல் மாவட்டத்தில் 85 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் ஓமலூர்-பரமத்தி சாலை (மாநில நெடுஞ்சாலை -86) அத்திபாளையம் அருகில் தொடங்கி மல்லியக்கரை-ஈரோடு சாலையில் (மாநில நெடுஞ்சாலை -79) தொக்கவாடி அருகில் இணையும் வகையில் 6.6 கி.மீ நீளத்திற்கு 10 மீட்டர் அகல இரு வழிச்சாலையாக திருச்செங்கோடு நகரத்திற்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச் சாலை (கட்டம்-2);

திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 81 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக 12.60 கி.மீ நீளத்திற்கு அகலப்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட அவிநாசி – மேட்டுப்பாளையம் சாலை;

திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் 101 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் உன்னியூர் மற்றும் நெரூர் கிராமங்களை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம்;

என மொத்தம் 4813 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 13 சாலைகள் மற்றும் ஒரு பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்

சாலைகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் 113 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக கல்லணை சாலை மற்றும் தரங்கம்பாடி – மயிலாடுதுறை இணைக்கும் வகையில் 10 கி.மீ நீளத்திற்கு இருவழித்தடமாக அமைக்கப்படவுள்ள மயிலாடுதுறை புறவழிச் சாலை பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் டாக்டர் ஆர். செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம், திட்டம்-II மற்றும் சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்டம் . இரா.விமலா, சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) உயர் அலுவலர்கள் கலந்து ஆர்.சந்திரசேகர் மற்றும் கொண்டனர்.

Related Stories: