தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனு :நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு என புகார்

செங்கல்பட்டு : தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். கணவர் விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்துக் கோரி சங்கீதா மனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த 1999 ஆகஸ்ட் 25 அன்று சங்கீதாவை திருமணம் செய்து கொண்டர். இலங்கையை பூர்வீகமாக கொண்ட சங்கீதா விஜய்யின் ரசிகர் ஆவர். இவர்களுக்கு சஞ்ஜை என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திருமணம் முடிந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக சங்கீதா தனது மனுவில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். மேலும் அந்த மனுவில், “திருமண வாழ்க்கை தொடக்க ஆண்டுகளில் இனிமையாகவே சென்றது. 2021-ஆம் ஆண்டு நடிகை ஒருவருடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தேன். நடிகையுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதி கூறியும் அதன்படி நடக்கவில்லை. சிறிதும் வருத்தமின்றி நடிகையுடனான தொடர்பை விஜய் தொடர்ந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானேன். கணவன் – மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். எனவே விஜய்யிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும், “என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வரும் மார்ச் 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் தவெக தலைவர் விஜய் குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: