பிரதமர் மோடி அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறை, விவசாயிகளை கடுமையாக பாதிக்கும்: ராகுல் காந்தி

டெல்லி: பிரதமர் மோடி அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தம் இந்திய ஜவுளி துறை, விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட காணொலியில் பிரதமரை “சரண்டர்” மோடி என விமர்சித்துள்ளார். மேலும் ‘பொய் சொல்லும் பிரதமரும் அவரது அமைச்சர்களும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து குழப்பங்களை பரப்புகிறார்கள். வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விவசாயிகள், ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஏமாற்றுகின்றனர். கேள்வி கேட்டால் அமெரிக்காவிடம் பஞ்சு இறக்குமதி செய்தால் வங்கதேசம் போல நமக்கும் பலன் வரும் என்கிறார் அமைச்சர். இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் பற்றிய உண்மைகளை மக்களிடம் மறைத்தது ஏன்?. தொலைநோக்கு சிந்தனையுள்ள அரசு விவசாயிகள், ஜவுளித்துறையை பாதுகாக்கும் ஒப்பந்தத்தை உருவாக்கும். ஆனால் மோடி அரசு இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துள்ளார்கள்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: