கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏ செ.தாமோதரனுக்கு இந்தமுறை அக்கட்சியில் சீட் மறுக்கப்படுகிறது. இவர், அதிமுக பல துண்டுகளாக சிதறுண்டு போனபோது டி.டி.வி. அணியில் சேர்ந்தார். பின்னர், எடப்பாடி அணிக்கு தாவினார். ஆனாலும், இவர் மீது கட்சியின் மேலிடம் கடும் அதிருப்தியில்தான் இருக்கிறது. அதனால், இம்முறை இவருக்கு கல்தா கொடுக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், கூட்டணி கட்சியான பாரதிய ஜனதாவுக்கு இம்முறை கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அது, கிணத்துக்கடவு தொகுதிதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனால், மாஜி அமைச்சர் செ.தாமோதரனுக்கு இம்முறை அதிமுகவில் சீட் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர், மேலிட தலைவர்கள் சிலரிடம் தனது நிலை குறித்து புலம்பி தள்ளியுள்ளார். ‘’எனக்கு அம்மா மந்திரி பதவியே கொடுத்தாங்க…
ஆனால், இப்போ கட்சியில எனக்கு எம்எல்ஏ பதவிகூட தரமாட்டாங்க போலிருக்கே… இப்படியே போனா, கட்சியில் எப்படி நீடிப்பது?’’ என விரக்தியில் கதறி வருகிறாராம். இதேபோல், அதிமுகவில் சூப்பர் சீனியரான மாஜி அமைச்சர் செம வேலுச்சாமி, தனது சொந்த தொகுதியான சூலூரில் நிற்க ஆசைப்படுகிறார். இவர் கடந்த 15 ஆண்டாக கட்சியில் எந்த பெரிய பொறுப்பும் இல்லாமல் டம்மியாக இருந்தார். கோவை மேயர் பதவி இழந்த பின்னர் எல்லாம் போச்சு என புலம்பி கொண்டிருந்த இவருக்கு சமீபத்தில் தான் அமைப்பு செயலாளர் பதவி தந்தார்கள்.
அதுவும் எதுவும் பேசக்கூடாது என கண்டிசன் போட்டு தந்திருக்கிறார்களாம். இந்த நிலையில், தனது ஜூனியரான எஸ்பி வேலுமணியிடம் இந்த முறை சூலூர் தொகுதிக்கு சீட் வாங்கி தரும்படி கேட்டாராம். அவரும் பார்த்து ஏற்பாடு செய்யறேன் என சொல்லி இருக்கிறாராம். அதே நேரத்தில் அவருக்கு பதிலாக சூலூர் கந்தசாமிக்கு சீட் தர ஏற்பாடு நடக்கிறதாம். செம வேலுச்சாமி சொன்ன பேச்சு கேட்கமாட்டார்.
அவர் மேயராக இருந்த போது மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு அப்போது உள்ளாட்சி அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி வந்துள்ளார். என்னை கேட்காம என் கூட்டத்திற்கு எப்படி வரலாம், அமைச்சர்னா அது அங்கே, இங்க எல்லாம் என்னை கேட்காம வரக்கூடாது என சொல்லி அனுப்பி விட்டாராம். இது இன்னும் தீரா பகையாக தொடர்கிறதாம். கடைசியா பல்லடம் தொகுதியாவது கிடைக்கும் என செம வேலுச்சாமி எதிர்பார்த்தார்.
ஆனால் அதையும் வேலுமணி முடக்கி விட்டாராம். அடம் பிடித்து கேட்டால் பாஜவிற்கு தொகுதியை வாங்கி கொடுத்து விடலாம் என வேலுமணி மாஸ்டர் பிளான் போட்டு இருப்பதை அறிந்து செம வேலுச்சாமி புலம்பி கொண்டிருக்கிறாராம். யார் யாரோ கூப்பிட்டாங்க, நான் போகாம அதிமுகவில் ெதாடர்ந்து இருக்கிறேன். ஆனால் என்னை இப்படி ேசாதிக்கிறாங்களே, அம்மா இருந்தா இப்படி நடக்குமா என தனது சகாக்களிடம் செம வேலுச்சாமி புலம்பி வருகிறாராம்.
* அப்போ 20 சி… இப்போ 25 சி…
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சிங்காநல்லூர் தொகுதிதான் ரொம்பவே காஸ்ட்லியான தொகுதியாம். கடந்தமுறை இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம், அதிகபட்சமாக 20 கோடி ரூபாய் வரை செலவு செய்தாராம். மாவட்டத்தில் வேறு எந்த தொகுதி வேட்பாளர்களும் இந்த அளவுக்கு பணம் செலவு செய்யவில்லையாம்.
காரணம், திமுக வேட்பாளராக களம் இறங்கிய முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் இந்த தொகுதியில் வலுவாக இருந்தார். அத்துடன், கமல் கட்சி சார்பில், டாக்டர் மகேந்திரனும் போட்டியிட்டதால், கடும் போட்டியை சமாளிக்க கன்னா…பின்னா…வென செலவு செய்துள்ளார். அதுபோல், இம்முறையும் சிங்காநல்லூர் தொகுதியை குறி வைக்கிறார். இம்முறை 25 கோடி வரை செலவு செய்ய தயார்.. என கட்சியின் மேலிடத்தில் கூறி, சீட் கேட்டு வருகிறாராம்.
