பாமக தனித்து போட்டி இல்லை: ஜி.கே.மணி திட்டவட்டம்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ராமதாஸ் 2வது நாளாக நேற்று நேர்காணல் நடத்தினார். நேற்று முன்தினம் 800 பேர் நேர்காணலில் கலந்து கொண்ட நிலையில், நேற்று 13 மாவட்டங்களை சேர்ந்த 460க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று இறுதி கட்டமாக 13 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

முன்னதாக பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், ‘ராமதாஸ் தலைமையிலான பாமக, தனித்து போட்டியிடப் போவதில்லை. கூட்டணி அமைத்து தான் போட்டியிடும். அந்த கூட்டணி, யாரோடு என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ராமதாஸ் நேரடியாக கூட்டணி பேசவில்லை. யாருடன் கூட்டணி என்பதை ராமதாஸ் இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் முடிவெடுப்பார். யாருடன் கூட்டணி பேசுகிறோம் என்பதை வெளியே கூறுவது சரியாக இருக்காது என்றார்.

Related Stories: