ரூ.200 டிக்கெட் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பதால் ரூ.500 கோடி சம்பளம்; ஒயிட்டில் வாங்குவது எவ்வளவு? பிளாக்கில் வாங்குவது எவ்வளவு? கொள்ளையடிச்சுட்டு ஊழலை பற்றி பேசுவதா?

* வீண் பில்டப் வேணாம்பா விஜய், எழுந்திருக்க முடியாம அடிச்ச திண்டுக்கல்

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தப்பில்லை. அரசியலுக்கு வந்து முன்மாதிரியாக இருக்கக்கூடிய தலைவர்களை பார்த்து அரசியல் செய்ய வேண்டும். அதை விட்டு வீண் பில்டப் கொடுக்க கூடாது. அவர் பயங்கரமாக பில்டப் கொடுக்கிறார். அதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எம்ஜிஆரை தனது ரோல் மாடல் என்று சொன்ன நடிகர் விஜய் எங்கள் கட்சியை ஊழல் கட்சி என்று தாக்கி பேசுகிறார். எங்கள் கட்சியை, ஊழல் கட்சி என்று சொன்னதால் தான், மூன்று தினங்களாக அவரது குறைகளை நாங்கள் சொல்லி வருகிறோம். ஊழல் என்று எங்களைப் பார்த்துச் ெசால்லும் விஜய், படத்துக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு? அதில் பிளாக்கில் வாங்குவது எவ்வளவு? ஒயிட்டில் வாங்குவது எவ்வளவு? அதற்கு நீங்கள் கட்டிய வரி எவ்வளவு? மீதிப் பணத்தை எங்கே வைத்திருக்கிறீர்கள்?

அவர் நடித்து வெளிவரும் படங்களுக்கு டிக்கெட் விலை 200 இருக்கும் போது அதை ரூ.2000க்கு பிளாக்கில் விற்கிறார்கள். அப்படி விற்கும் இந்த பணம் தயாரிப்பாளருக்குப் போகிறது. அதனால் தான் அவருக்கு 500 கோடி, ஆயிரம் கோடி என்று சம்பளம் தருகிறார்கள். அரசாங்கப் பணத்தை ஒரு பைசா கூட தொடமாட்டேன் என்று விஜய் பேசியிருக்கிறார்.  ஏனென்றால், பிளாக்கில் விற்றதன் மூலம் கொள்ளையடித்து வைத்த பண்ம அவரிடம் நிறைய இருக்கிறது.

அதனால் தான் வேறு பணம் எனக்குத் தேவையில்லை என்கிறார். அவர் நடித்த ஒரு படத்தில் வருமானத்தை குறைத்து காட்டியதாக ஒன்றரை கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரி துறையால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது குஜராத்தில் மூன்று முறை முதல்வராக மோடி இருந்தார் என்று சொல்வதற்குப் பதில் உத்தரப்பிரதேசத்தில் 3 முறை முதல்வராக இருந்தார் என்றும், விஜய் கார் வாங்கியதில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு இருப்பதை, திரைப்பட வருமானம் என்று மாற்றிச் சொன்னார். வழக்கம்போல உளறுவதாக கட்சியினர் முணுமுணுத்த படியே வெளியேறினர்.

Related Stories: