டெல்லி: ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்து சென்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் ஜனவரி மாதம் டெல்லி வருகிறார். பயண தேதி இந்திய – உக்ரைன் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவிக்கப்படும். புதின் இந்தியா வருகையின்போது உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
