டெல்லி மாநில அரசின் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர் திட்டம்: குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு டெல்லி அரசின் ஆண்டுக்கு இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். டெல்லி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் பெண்களுக்கான 4 திட்டங்களை தொடங்கி வைத்தார். ஹோலி மற்றும் தீபாவளியன்று ரேஷன்கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் மற்றும் ரூ.129 கோடி நேரடி சலுகை பரிமாற்றம் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றுவது உள்பட 4 திட்டங்களை குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ‘‘இலவச பேருந்து பயணம் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து அணுகல் போன்ற முயற்சிகள் பெண்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்தும். முடிவெடுக்கும் சுதந்திரத்துடன் கூடிய அதிகாரம் பெற்ற பெண்கள் சமூகம் மற்றும் தேசத்தின் திசையை மாற்ற முடியும். பெண்களுக்கு அதிகாரமளிப்பது அரசின் கடமை மட்டுமல்ல. சமூகமும் அதன் பங்கை வகிக்க வேண்டும்” என்றார்.

Related Stories: