புதுடெல்லி: ஏஐ உச்சி மாநாட்டில் அரைநிர்வாணப் போராட்டம் நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸை சேர்ந்த ஒன்பது பேருக்கும் ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லியில் நடந்த ஏஐ சர்வதேச மாநாட்டின்போது அங்கிருந்த வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் பிரிவை சேர்ந்தவர்கள் அரைநிர்வாணப் பேரணியில் ஈடுபட்டனர். சர்வதேச ஊடகங்கள் முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யப்பட்டதாக கூறி முழக்கங்களை எழுப்பினார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது அவர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் சில காவலர்கள் காயமடைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்தனர். இவர்கள் ஜாமீன்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
