×

மேடையில் வரலட்சுமி கண்ணீர்: படவிழாவில் பரபரப்பு

 

சென்னை: சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானாலும் தனது திறமையால் வளர்ந்தவர் வரலட்சுமி சரத்குமார். நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிய அவர் சில சறுக்கல்களை சந்தித்தார். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது ‘சரஸ்வதி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய வரலட்சுமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கோபிசந்த் மலினேனிக்கு நன்றி சொல்லி கண்கலங்கினார்.

அவர் பேசும்போது, ‘‘ஆரம்பத்தில் எனக்கு சரியான படவாய்ப்புகள் வரவில்லை என்றாலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பல பட வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. அதற்கு காரணம் அந்த நேரத்தில் ‘கிராக்’ என்ற படத்தில் கோபிசந்த் மலினேனி எனக்கு கொடுத்த முக்கியமான கதாபாத்திரம்தான். அதன்பிறகு எனக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் வந்தது. அவர் இல்லாமல் இந்த இடத்தில் நான் இல்லை. என்னுடைய சினிமா பயணத்தை அவர்தான் மீண்டும் துவங்கி வைத்தார்” என்று கண்கலங்கி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

 

Tags : Varalakshmi ,Chennai ,Varalakshmi Sarathkumar ,Sarathkumar ,Gopichand Malineni ,
× RELATED விமர்சனம்