- விக்ரம்
- மேடன் அஸ்வின்
- அருண் விஷ்வா
- டாக்கீஸ்
- பிரேம்குமார்
- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
- போடி கே. ராஜ்குமார்
கடைசியாக ‘வீர தீர சூரன்: பாகம் 2’ படத்தில் நடித்திருந்த விக்ரம், அடுத்து மடோன் அஷ்வின் டைரக்ஷனில் நடிக்க ஒப்பந்தமானார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரிக்கும் இது, விக்ரமின் 63வது படமாக உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு சில காரணங்களால் விக்ரம் நடிக்கவில்லை. இந்நிலையில், போடி கே.ராஜ்குமார் இயக்கத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார்.
சாந்தி டாக்கீஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் விக்ரம் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், ‘சில நேரங்களில் மவுனம் என்பது நம் தயாரிப்புக்கானது. இந்த வருடம் என்னை நெகிழவைக்கும் கதைகளுக்காக காத்திருந்தேன். நான் மிகவும் போற்றும் இயக்குனர்களுடன், மிகவும் வித்தியாசமான நான்கு படங்களில் நடிக்கிறேன். இப்பயணத்தை உங்களுடன் பகிர ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர்.
