சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் ஆகிய பலரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘டிராகன்’. இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில், கடந்த 21ம் தேதியுடன் ‘டிராகன்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ‘டிராகன் 2’ பட அப்டேட்டை பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது சோஷியல் மீடியாவில், ‘‘நண்பனாக இருந்து இயக்குனராக மாறுவதற்கு எனக்கு சில காலம் எடுத்துக்கொண்டது.
ஆனால், இப்போது இரண்டிலும் சிறந்ததை நான் பெற்றுள்ளேன். விரைவில்’’ என்று பதிவிட்டு 2 டிராகன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு மறைமுகமாக 2ம் பாகத்திற்கான தகவலை தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்
அதே போல, ‘டிராகன்’ பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது சோஷியல் மீடியாவில் ‘‘டிராகன் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. மீண்டும் ஒருமுறை இந்த காம்போ இணையவுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
