முகமூடி அணிந்து நல்ல பேர் வாங்கும் நடிகர்கள்: மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் அளித்திருந்த ஒரு பேட்டியில், திரைத்துறையில் ஆண், பெண் வேறுபாடுகள் பார்க்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருந்தார். திரையுலகில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியிருப்பது வருமாறு:
சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பவர்கள் போல் தங்களை காட்டிக்கொள்வார்கள். அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்கள். 5 ஆண்டுகளில் மட்டும் முகமூடி அணிந்து இருக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

எந்தெந்த நேரத்தில் பெண்களை மதித்து பேச வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், கேமராவுக்கு பின்னால் அவர்கள் எப்படி மாறுவார்கள் என்பதை கண்கூடாக பார்த்து இருக்கிறேன். ஏன் இந்த பாசாங்குத்தனம்? ஆண் என்றால் ஒருமாதிரியும், பெண் என்றால் ஒருமாதிரியும் பார்க்கும் நிலை சினிமாவில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது எப்போது முடிவுக்கு வரும் என்று எனக்கு தெரியவில்லை.

Related Stories: