* இனிமேல், வெளிநாட்டு நிதியைப் பெற அனுமதி கோரும் தொண்டு நிறுவனங்கள் தீவிரவாத நிதியுதவி மற்றும் பணமோசடிக்கான உலகளாவிய கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எப்ஏடிஎப்) நன்னடத்தை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.
* சொத்துக்கள், வரவு செலவு கணக்கு உள்ளிட்ட கடந்த 3 நிதியாண்டுகளின் நிதி அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை இணைக்க வேண்டும்.
* ஒருவேளை சம்மந்தப்பட்ட சங்கமோ அல்லது தொண்டு நிறுவனமோ பப்ளிகேஷன் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலோ அல்லது அவர்களின் நோக்கமாக அது இருந்தாலோ வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறை சட்டம் 2010க்கு முழுமையாக இணங்குவதாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.
* சங்கத்தின் பப்ளிகேஷன் இந்திய செய்தித்தாள் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்டது எனில், கட்டாயம் பதிவாளரிடம் இருந்து ‘செய்தித்தாள் அல்ல’ என்ற சான்றிதழை பெற்று சமர்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post வெளிநாட்டு நிதிபெறும் தொண்டு நிறுவனங்கள் செய்தி பத்திரிகை வெளியிட தடை: ஒன்றிய உள்துறை புதிய நிபந்தனை appeared first on Dinakaran.