இந்த நிலையில்,புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு முறையீட்டை நேற்று வைத்தார். அதில் “வரும் 19ம் தேதி மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக பட்டியலிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக கடந்த 2023ம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமே இரட்டை இலை சின்னம் உச்ச நீதிமன்றத்தால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கப்பட்டது. இதனையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிமன்றம், வழக்கை வரும் வாரம் பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளது.
The post அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் அடுத்த வாரம் உத்தரவு: டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி appeared first on Dinakaran.